Monday, January 9, 2012

சென்னை, தியாகராய நகரில் சீல்' வைத்த கடைகளை 6 வாரம் திறக்க அனுமதி:


தியாகராய நகரில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஏராளமான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளை பண்டிகைக்காக திறக்க அனுமதி கோரி சுப்ரீம்கோர்ட்டில் வியாபாரிகள் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சீல் வைத்த கடைகளை 6 வாரம் திறக்கலாம் என்று உத்தரவிட்டனர். சீல் வைப்பு தொடர்பான இறுதி உத்தரவை பெற ஐகோர்ட்டை அணுகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
கடைக்காரர்களின் மனுவை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது:பிரதமர் மன்மோகன்


டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் ஊடகங்களை குறித்து கூறியிருப்பதாவது:  
 
மக்களுக்கு செய்திகளை தெரியப்படுத்தும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து ஊடகங்கள் மற்றும் அதனுடைய செயல்பாடு பற்றிய விவாதம் நாட்டில் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.
 
மேலும், ஊடகங்களில் உண்மையான உணர்ச்சிமிக்க செய்திகளை வெளியிடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். தவறான செய்திகளை வெளியிடக்கூடாது. அதுமட்டுமின்றி பணம் கொடுத்தால் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாவதை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றியபோது:
 
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு புதிய பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் துவங்கப்படும். இயற்கையான மரணத்துக்கு குறைந்த ஆயுள் காப்பீட்டு திட்டமும் இதில் அடங்கும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்படுவதோடு,  அவர்களுடைய பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை நவீனமயமாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என தான் நம்புவதாகவும் கூறினார்

ABDUL HAMEED INTERVIEW

tamilnadu siddah,ayurvwdha,unani doctors award programmes

tamilnadu siddah,ayurvwdha,unani doctors award programmes

tamilnadu siddah,ayurvwdha,unani doctors award programmes


tamilnadu prayana porul thayaripore sangam