Sunday, January 8, 2012

tamilnadu sidha,ayurveda,unani,accupuncture doctors award function


Tamilnadu prayana porul thayaripore sangam








CHENNAI BOOK FAIR












CHENNAI BOOK FAIR


பாகிஸ்தான் சிறையிலிருந்து 180 இந்தியர்கள் விடுதலைஇந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பாகிஸ்தான் நாட்டின் நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள் உள்ளிட்ட 180 இந்தியர்களை அந்நாடு இன்று விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட அனைவரும் 4 பஸ்களில் லாகூர் அருகே வாகா எல்லைக்கு கொண்டுவரப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 179 மீனவர்கள் தவிர மீதமுள்ள ஒரு நபர் பாகிஸ்தான் எல்லையில் அத்து மீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவராவார். அவரது பெயர் சாமா யூசுப் ஆகும். நன்னடத்தை காரணமாக இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் சிறை குறித்து கூறியதாவது:- 'பாகிஸ்தான் சிறையில் இன்னும் 271 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 320 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் நாங்கள் விடுதலை அடைந்திருக்கிறோம் என்றார்.


ராமேசுவரத்தில்,தொடர்மின்தடை அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரத்தில், தொடர்ந்து 2-ம் நாளாக மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மின்வாரிய அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பகல் முதல் வியாழக்கிழமை பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபட்டது.இதன்பின்னர், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும் மின்தடை செய்யப்பட்டது.தொடர்ந்து 2 நாள்களாக மின்தடை ஏற்பட்டதால், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கொசுத் தொல்லையாலும், இரவில் தூங்க முடியாமலும் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் கடந்த இரு நாள்களாக நகராட்சி தெருக் குழாய்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் ஒரு குடம் ரூ. 5 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், மின்தடை பிரச்னையை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி, மின்வாரிய அலுவலகம் முன்பாக அனைத்துக்கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தார்.காங்கிரஸ் நகர் தலைவர் பாரிராஜன், பாஜக தேசியக் குழு உறுப்பினர் முரளீதரன், திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், நாசர்கான், சிபிஎம் கட்சியின் முன்னாள் செயலர் கருணாகரன், தேமுதிக செயலர் முத்துகாமாட்சி, இந்து முன்னணி செயலர் ராமமூர்த்தி, பாஜக நகர் பொதுச் செயலர் ராம்பிரசாத், இந்து மக்கள் கட்சி நிர்வாகி நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் முதல் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை: இராக் இளைஞருக்கு வழியனுப்பு விழாஇந்தியாவில் முதன்முதலாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள இராக்கைச் சேர்ந்த இளைஞருக்கு வழியனுப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இராக் நாட்டைச் சேர்ந்த கரீம் ஹமீத் அமீன் (33) நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம்தான் உயிர் பிழைக்க முடியும் என்று அறிவுறுத்தினர். அப்போது விபத்தில் சிக்கி மூளைச் சாவு ஏற்பட்ட 18 வயது இளைஞரின் நுரையீரலை கரீமுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி தலைமை இதய அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 4 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து கரீமுக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தனர். தற்போது நன்கு குணமடைந்து இராக் நாட்டிற்கு செல்லும் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. விழாவில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன் பேசும்போது, அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரத்தில் வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போது இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 25 நுரையீரல் நோயாளிகள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ளனர் என்றார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர். சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.கந்தன், குளோபல் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி உமா நம்பியார், நுரையீரல் நோய் மருத்துவர்கள் விஜில் ராகுலன், கோவினி பாலசுப்ரமணி, மயக்கவியல் மருத்துவர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


(தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) "ஓமியாட்'சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி

"ஓமியாட்' சங்கத்தின் (தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி வரும் புதன்கிழமை (ஜனவரி 11) தியாகராயநகர் அஞ்சுமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.  இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சாதிக் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:  இளம் விஞ்ஞானிகளைக் கண்டறியும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள கண்காட்சியை கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.தமிழகம், வெளிமாநிலங்களிலிருந்து 35 இஸ்லாமிய நிர்வாகப் பள்ளிகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. இயற்பியல் அறிவியல், உயிர் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் என மூன்று வகையான தலைப்புகளின் கீழ் மாணவர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் இக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

சென்னை புத்த கக் கண்காட்சி சென்னை புத்த கக் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, நாகை முகுந்தன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வைரவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கவிதை பொழிதல் அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் கவிதை பொழிதல் நிகழ்ச்சி, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடக்கிறது. இதில் கவிஞர்கள் பழனிபாரதி, நெல்லை ஜெயந்தா, நந்தலாலா, சேதுபதி, தங்கம் மூர்த்தி, ஆண்டாள் பிரியதர்சினி ஆகியோர் "மணிவாசம்' என்னும் தலைப்பில் கவியரங்கில் பேசுகின்றனர்.இன்று கலாம் பேசுகிறார்


நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்தானே' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நிரந்தரமாக மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புயல் சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கை, நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான குழு சனிக்கிழமை காலை தமிழகம் வந்தது. மாநில தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய வேளாண்மைத் துறை இயக்குநர் கே.மனோகரன், மத்திய நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதுநிலை மண்டல இயக்குநர் பழனிவேலு, மத்திய மின்துறை இயக்குநர் விவேக் கோயல், மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் முரளிதரன், மத்திய குடிநீர் மற்றும் பொதுசுகாதாரத் துறை துணை ஆலோசகர் ஆர்.ஜெ.தத்தா சௌத்ரி, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை நிர்வாக இயக்குநர் பி.பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்திய குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று புதுச்சேரி பயணம்: மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மாலை 6 மணிக்கு முடிந்தது. புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினருக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. மேலும், பாதிப்பு குறித்த படத்தொகுப்புகளும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும், அவற்றைச் சீர்செய்வது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகிய திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனு தமிழகத்தின் சார்பில் மத்திய குழுவினரிடம் அளிக்கப்பட்டது. மத்திய குழுவினர் தங்களது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) தொடங்குகின்றனர். முதலில் அவர்கள் புதுச்சேரி செல்லவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு முழு அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் அவர்கள், திங்கள்கிழமை (ஜனவரி 9) கடலூர் செல்கின்றனர். இரண்டு நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பின்னர், செவ்வாய்க்கிழமை சென்னை வரவுள்ளனர். இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது. விரிவான ஆலோசனைக்குப் பின் அவர்கள் தில்லி செல்லவுள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடி தேவை? புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், எதிர்காலத்தில் புயல் போன்ற பேரிடர் ஏற்பட்டால் அதில் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று தமிழக அரசு மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும். இந்த அறிக்கையை பரிசீலிப்பதற்கென மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கொண்ட குழு தனியாக உள்ளது. அந்தக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்அடிப்படையில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும் என மத்திய அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.