Wednesday, December 28, 2011

தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே சமாதானத்தை கொண்டுவர பிரதமர் தவறிவிட்டார்:பா.ஜ.க.குற்றச்சாட்டு


எல் .கணேசன்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் இடையே சமாதானத்தை  கொண்டுவர  பிரதமர் தவறிவிட்டார் என்று தமிழ்நாடு பா.ஜ.கட்சியின் முன்னாள்  தலைவர் எல் .கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வாஜ்பாய்  பிரதமராக இருந்த போது காவேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில முதல்வரையும் கர்நாடக மாநில முதல்வரையும் அழைத்து அவர்களுடன் 7 மணி நேரம் விவாதம் நடத்தினார் என்றும் அவர்  குறிப்பிட்டார்.
இந்த அணை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.தற்போது நிறைவேற்றப்பட்ட  லோக்பால் மசோதா வலுவற்றது. இந்த லோக்பாலை  கொண்டு   ஊழலை ஒழிக்க  முடியாது எனவும் தெரிவித்தார்.