டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் ஊடகங்களை குறித்து கூறியிருப்பதாவது:
மக்களுக்கு செய்திகளை தெரியப்படுத்தும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து ஊடகங்கள் மற்றும் அதனுடைய செயல்பாடு பற்றிய விவாதம் நாட்டில் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.
மேலும், ஊடகங்களில் உண்மையான உணர்ச்சிமிக்க செய்திகளை வெளியிடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். தவறான செய்திகளை வெளியிடக்கூடாது. அதுமட்டுமின்றி பணம் கொடுத்தால் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாவதை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.
No comments:
Post a Comment