Sunday, January 8, 2012
சென்னை புத்த கக் கண்காட்சி சென்னை புத்த கக் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, நாகை முகுந்தன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வைரவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கவிதை பொழிதல் அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் கவிதை பொழிதல் நிகழ்ச்சி, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடக்கிறது. இதில் கவிஞர்கள் பழனிபாரதி, நெல்லை ஜெயந்தா, நந்தலாலா, சேதுபதி, தங்கம் மூர்த்தி, ஆண்டாள் பிரியதர்சினி ஆகியோர் "மணிவாசம்' என்னும் தலைப்பில் கவியரங்கில் பேசுகின்றனர்.இன்று கலாம் பேசுகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment