Monday, January 9, 2012

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றியபோது:
 
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு புதிய பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் துவங்கப்படும். இயற்கையான மரணத்துக்கு குறைந்த ஆயுள் காப்பீட்டு திட்டமும் இதில் அடங்கும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்படுவதோடு,  அவர்களுடைய பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை நவீனமயமாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என தான் நம்புவதாகவும் கூறினார்

No comments:

Post a Comment