தியாகராய நகரில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஏராளமான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளை பண்டிகைக்காக திறக்க அனுமதி கோரி சுப்ரீம்கோர்ட்டில் வியாபாரிகள் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சீல் வைத்த கடைகளை 6 வாரம் திறக்கலாம் என்று உத்தரவிட்டனர். சீல் வைப்பு தொடர்பான இறுதி உத்தரவை பெற ஐகோர்ட்டை அணுகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடைக்காரர்களின் மனுவை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment