Monday, February 6, 2012

ஆற்காடு அருகே என்ஜினீயரிங் கல்லூரி பஸ் பாலத்தில் கவிழ்ந்து விபத்து: மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் உள்பட 30 பேர் படுகாயம்


ஆற்காடு அருகே என்ஜினீயரிங் கல்லூரி பஸ் பாலத்தில் கவிழ்ந்தத விபத்தில் மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் உள்பட 30 பேர் படுகாயமடைந்தனர். என்ஜினீயரிங் கல்லூரி பஸ் ஆற்காடு அடுத்த திம்மசமுத்திரம் அருகே தனியார் என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. வேலூர் மற்றும் ஆற்காடு சுற்றுபுற பகுதியில் படிக்கும் மாணவர்களை கல்லூரி பஸ் தினமும் செல்வது வழக்கம்.
 
இன்று காலை 25 மாணவர்கள் 2 மாணவிகள், பேராசிரியர்களை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆற்காடு- செய்யாறு ரோட்டில் டெல்லி கேட் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்த தடுப்பில் பஸ் மோதியது. இதில் நிலைதடுமாறிய பஸ் சுமார் 10 பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த மாணவர்கள் அலறினர்.
 
அப்பகுதியில் வேலூர் மேயர் கார்த்தியாயினி தனது கணவர் அனுஷ்குமாருடன் காரில் சென்று கொண்டிருந்தார். விபத்தை பார்த்த இவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார். இந்த விபத்தில் பேராசிரியர் மணிகண்டன்(30), செந்தில் (40), கணபதி (40), மாணவிகள் தமிழ்செல்வி (19), பரமேஸ்மரி (19), மாணவர்கள் சதீஷ்குமார், பாபு, லோகன் உள்பட 30பேர் படுகாயம் அடைந்தனர்.
 
ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆனதால் அப்பகுதியில் வந்த தனியார் பள்ளி பேருந்தில் படுகாயம் அடைந்தவர்களை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். மேல்விஷாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் 15 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment