கடந்த 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது தற்காலிக பணியாளர்களாக 15 ஆயிரம் இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தி.மு.க. ஆட்சியில் அவர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இதில் 1,200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் விடுபட்ட 1200 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக இன்று முதல் 5 நாட்களுக்கு அரசு தேர்வாணையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. இன்று 250 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதனை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் வழங்கினார். 10 ஆண்டுகளுக்கு பிறகு பணி நியமன ஆணை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதில் 1,200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் விடுபட்ட 1200 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக இன்று முதல் 5 நாட்களுக்கு அரசு தேர்வாணையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. இன்று 250 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதனை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் வழங்கினார். 10 ஆண்டுகளுக்கு பிறகு பணி நியமன ஆணை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment