பொன்னேரி:""மீன்பிடி படகுகளில் பயணிகள் சவாரி செய்வதை தடை செய்ய வேண்டும்,'' என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சேகர் கூறினார். அவர் கூறியதாவது:விசேஷ தினங்களில், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான எவ்வித பாதுகாப்பு வசதியும் அங்கு இல்லை.
படகு சவாரியை விரும்பும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தான ஏரி மற்றும் முகத்துவார பகுதிகளில் வலம் வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலிகள் தொடர்கின்றன. மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளில், பயணிகள் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு சேகர் கூறினார்
படகு சவாரியை விரும்பும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தான ஏரி மற்றும் முகத்துவார பகுதிகளில் வலம் வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலிகள் தொடர்கின்றன. மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளில், பயணிகள் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு சேகர் கூறினார்
No comments:
Post a Comment